உள்நாடு

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லையென்றும் மக்கள் பீதியடைந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்வனவு செய்ய வேண்டாம் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்தார்.

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக பொய்யான செய்திகளை பரப்பி மக்களை சங்கடப்படுத்துவதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (16) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கம் எவ்வித தட்டுப்பாடும் இன்றி எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

   

Related posts

கொழும்பில் பல வீதிகள் மூடப்பட்டுள்ளது- அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்துவோருக்கும் எச்சரிக்கை

பரிசோதனை நிபுணர்கள் இன்மையால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நெருக்கடி!

மேலும் 55 பேர் குணமடைந்தனர்