(UTV | கொழும்பு) – 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று (07) முன்வைக்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் அடிப்படையில், அரசாங்கத்தின் முழு செலவீனமானது 2,505.3 பில்லியன் ரூபாவாகக் காணப்படுகின்றது.
அரசாங்கம் புனரமைப்புக்காக – 1,776 பில்லியன் ரூபா
இந்த வருடத்திற்கான செலவீனமான 2,538 பில்லியன் ரூபாவை காட்டிலும் அடுத்த வருடத்தின் செலவீனமானது 33 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
பொதுச் சேவைகளுக்காக – 12.6 பில்லியன் ரூபா
அடுத்த வருட ஜனாதிபதியின் செலவீனமானது – 2.78 பில்லியன் ரூபா
இந்த வருடத்தில் பாதுகாப்புத்துறைக்கு 355 பில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டிருந்த நிலையில், அது அடுத்த வருடத்தில் 18 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சுகாதார துறைக்காக 153.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதுடன், இந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 6 பில்லியன் ரூபாவினால் அது குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.