உள்நாடு

தொற்றாளர்கள் – 515,524, மரணம் – 12,786

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்று உறுதியான 932பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 55 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 515,524 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 46,651 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12,786 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 26 பெண்களும் 29 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

உள்ளூர் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

இலங்கையில், ஒன்பது இலட்சம் பேர் தொழில்களை இழந்துள்ளனர்

முகக்கவசம் அணியத் தவறிய 18 பேர் கைது