உள்நாடு

கடந்த இரு நாட்களில் 229 கொரோனா மரணங்கள்

(UTV | கொழும்பு) – நாட்டில் நாளொன்றில் அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று(10) பதிவாகியுள்ளன.

இதற்கமைய, 118 கொரோனா மரணங்கள் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டு, அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 15 ஆண்களும், 2 பெண்களுமாக 17 பேர் மரணித்தனர்.

ஏனைய 101 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட 64 ஆண்களும், 37 பெண்களுமே மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 5 ,340 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் நாட்டில் 229 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

நேற்றைய தினம் 79 ஆண்களின் மரணங்கள் பதிவான நிலையில், கொவிட்-19 நோயால் மரணித்த ஆண்களின் எண்ணிக்கை 3,104 ஆக அதிரிகத்துள்ளது.

அத்துடன், 39 பெண்களின் மரணங்கள் பதிவான நிலையில், கொவிட்-19 நோயால் மரணித்த பெண்களின் எண்ணிக்கை 2 , 236 ஆக அதிரிகரித்துள்ளது.

 

Related posts

முக்கிய தீர்மானங்கள் தொடர்பான அரசின் அறிக்கை

ரவி உள்ளிட்ட 8 பேர் விளக்கமறியலில்

இன்று முதல் 11 இடங்களில் Rapid Antigen பரிசோதனை