உள்நாடு

கைதான ஆசிரியர்களை பார்வையிட சென்ற எதிர்கட்சித் தலைவருடன் பொலிசார் முறுகல்

(UTV | கொழும்பு) –  தன்னிச்சையாக கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை எதிர்க்கட்சித் தலைவர் பார்க்க அனுமதி இல்லை இது என்ன வகையான ஜனநாயகம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டத்தரணிகள் பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்காவிட்டால் நாட்டில் என்ன ஜனநாயகம் உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) காலை துறைமுக பொலிஸ் நிலைய வளாகத்திற்கு வருகை தந்து, ஆசிரியர்கள் அதிபர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு சம்பந்தப்பட்டதாக குற்றம்சாட்டி தன்னிச்சையாக கைது செய்யப்பட்ட ஆசிரியர்களின் நிலமைகளை பார்வையிட முற்பட்ட போது அதற்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டிற்கான ஒன்றுபட்ட நடவடிக்கை” ஐக்கிய குடியரசு முன்னணியின் முன்மொழிவு ஜனாதிபதியிடம் கையளிப்பு

இன்றைய தினம் மின்வெட்டு அமுலாகாது

ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிப்பு