உள்நாடு

பெண் வைத்தியரை புகைப்படம் எடுத்த வைத்தியருக்கு விளக்கமறியல்

(UTV | கம்பஹா) – ராகமை பொலிசாரால் கைது செய்யப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணி புரிந்த மருத்துவரை 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வைத்தியர் ராகமை தேசிய வைத்தியசாலையில் பணியாற்றியபோது, ராகமை வைத்தியர் விடுதியின் பெண் வைத்தியர் ஒருவரின் அறைக்குள் புகுந்து ஆடை மாற்றும் போது புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 10 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து நேற்று(11) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் குறித்த வைத்தியர் மீது இதுபோன்ற இரண்டு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிசார தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொதுத் தேர்தல் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

சஜித்தை வெல்ல வைப்பது தொடர்பில் ஹரீஸ் எம்.பி தலைமையில் நற்பிட்டிமுனையில் கூட்டம்.

editor

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து செயற்படுவார்