உள்நாடு

தொற்றாளர்கள் குறையவில்லை : பணிப்புறக்கணிப்பினால் முடிவுகளில் தாமதம்

(UTV | கொழும்பு) – நாட்டில் நாளொன்றில் குறைந்த கொரோனா நோயாளர்கள் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் நேற்று (05) பதிவாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று 816 பேருக்கே கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்படி நாட்டின் தொற்று எண்ணிக்கை 2,66 446 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிறைகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் மேற்கொண்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையால் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் தாமதமாகியுள்ளதாகவும் – இது தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவிற்கு காரணமாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

   

Related posts

பல்கலைக்கழக நுழைவுப் பதிவு இன்றுடன் நிறைவு

நந்தலால் நாடாளுமன்றுக்கு

“ஹிருணிகாவின் வீட்டிற்கு மலத் தாக்குதல்” – பொன்சேகா