உள்நாடு

தனிமைப்படுத்தலும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களும்

(UTV | கொழும்பு) – கண்டி மாவட்டத்தின் கட்டுகஸ்தொட்ட பொலிஸ் அதிகாரப்பிரிவுக்குட்பட்ட யட்டிவாவல கிராம சேவகர் பிரிவில் சாகராதெனிய தோட்டம் இன்று (04) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் மஹா வஸ்கடுவ தெற்கு கிராம சேவகர் பிரிவும், மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியகல்லார் 3 மற்றும் பெரியகல்லார் 3 தெற்கு கிராம சேவகர் பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தின் பெரமன தெற்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன.

   

Related posts

72 தொழிற்சங்கங்கள் நாளை தொழிற்சங்க நடவடிக்கை!

மேல் மாகாணம் தவிர்ந்த பாடசாலைகள் நாளை திறப்பு

அமைச்சர்கள் எரிபொருள் தேடி வெளிநாடுகளுக்கு