உள்நாடு

ரயில்வே ஊழியர்களிடையே வலுக்கும் கொரோனா

(UTV | கொழும்பு) – ரயில்வே ஊழியர்களிடையே கொவிட்-19 தொற்றின் பரவல் அதிகரித்து வருவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் இலங்கை ரயில்வே கடுமையான ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளதாக ரயில்வே தொழிற் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுகாதார வழிகாட்டுதல்கள், கொவிட்-19 பரவுவதைத் தணிக்கவும் தடுக்கவும் சுற்றறிக்கை வெளியிடப்பட்ட போதிலும், ரயில்வே அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால் வைரஸ் பரவுவது வேகமாக அதிகரித்துள்ளது.

எதிர்காலத்தில் ரயில்வே அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், ஏராளமான ஊழியர்கள் கொரோனா வைரஸால் பதிப்படையக் கூடும். மேலும் இது பயணிகளையும் அதிக ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்றும் இலங்கை ரயில்வே தொழிற் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

Related posts

பல பிரதேங்களில் நாளை 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு

இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே