உலகம்

இளவரசர் பிலிப்பிற்கு சனியன்று இறுதி அஞ்சலி

(UTV |  இலண்டன்) – பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் மறைவையொட்டி உலகத்தலைவர்கள் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அத்தோடு 8 நாட்கள் தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்கப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமை வின்சர் கோட்டையிலுள்ள பெர்க்மோர் (frogmore) தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும்.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் தனது 99 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் நேற்று (09) காலமானார்.

மறைந்த இளவரசர் பிலிப், 1921 ஆம் ஆண்டு கிரேக்க நாட்டில் பிறந்தார். 1947 ஆம் ஆண்டு இங்கிலாந்து மகா ராணி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்து கொண்டார்.

சுமார் 65 வருடங்கள் மகா ராணிக்கு உதவியாக இருந்த பிலிப், கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னை பொது வாழ்க்கையில் இருந்து விடுவித்துக்கொண்டார்.

இவர் மகாராணி எலிசபெத்தின் ஆட்சிக்கு மிகவும் உதவியாக இருந்தார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் நீண்ட வருடங்கள் இளவரசராக இருந்தவர் பிலிப்.

கடந்த பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிலிப்பிற்கு ஏற்கனவே இருந்த இருதய நோய் மற்றும் நோய்தொற்றுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர் குணமடைந்து வீடு திரும்பியிருந்த நிலையில் நேற்று காலமானார்.

  

Related posts

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு- நீதிமன்றம் ஒத்திவைப்பு

மியான்மரில் 2 ஆண்டுகளில் தேர்தல்

 சாரி அணிந்து மரதன்