உள்நாடு

களுத்துறைக்கு 18 மணித்தியால நீர் வெட்டு

(UTV | களுத்துறை) – களுத்துறை பிரதேசத்தில் சில பகுதிகளில் இன்று(24) 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

முற்பகல் 8.00 மணி தொடக்கம் நாளை(25) அதிகாலை 2.00 மணிவரையில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, தெற்கு கழுத்துறை, வடக்கு களுத்துறை, வாத்துவை, ஹிக்கடுவை, பொதுபிடிய,மொல்லிகொட மற்றும் மொரொன்துடுவ ஆகிய பிரதேசங்களில் குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளன.

களுத்துறை அல்விஸ் பிராந்திய நீர்த்தேக்க வளாகத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

ஜேவிபி முன்னாள் எம்பி சமந்த வித்யாரத்ன கைது

கடந்த வருடம் மட்டும் 85.4 பில்லியன் நட்டம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு