விளையாட்டு

இங்கிலாந்திடம் இந்தியா வீழ்ந்தது

(UTV | இந்தியா) – இந்திய அணியுடனான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுக்களினால் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது.

இந்தியாவின் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி, இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் Shreyas Iyer 67 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றுக்கொடுத்ததுடன், இங்கிலாந்து அணி சார்பில் Jofra Archer 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த நிலையில், 125 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 15 தசம் 3 ஓவர்கள் நிறைவில், இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

இதேவேளை, இந்த போட்டியில் ஆட்டநாயகனாக Jofra Archer தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நானும் கறுப்பினம் என வெறுக்கப்பட்டவன் : கெய்ல்

காயம் அடைந்த ஸ்டீவ் ஸ்மித் போட்டியிலிருந்து விலகல்

ஒருநாள் அணியின் புதிய தலைவராக திஸர பெரேரா