உள்நாடு

முகக்கவசம் அணியாத மேலும் 46 பேருக்கு தொற்று

(UTV | கொழும்பு) – கடந்த வாரத்தில் மாத்திரம் மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாத 2,334 பேர் பிசிஆர் மற்றும் உடனடி என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, நேற்று(11) மாத்திரம் 121 பேர் குறித்த பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த பரிசோதனைகளின் முடிவுகளுக்கு அமைவாக 46 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

கறுப்பு ஞாயிறு போராட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி பூரண ஆதரவு

அருங்காட்சியகங்களுக்கு செல்ல முன்பதிவு செய்ய வேண்டும்

2022 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானம்