உள்நாடு

போலி தகவல்களை வழங்குவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  போலியான தகவல்களை வழங்கும் அல்லது வழங்கப்பட வேண்டிய தகவல்களை மறைக்கும் கொரோனா நோயாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனைகளின் போதிலும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் போதிலும் பலர் போலியான தகவல்களை வழங்கியுள்ளமை பதிவாகியுள்ளன.

இவ்வாறு போலியாக வழங்கப்படும் தகவல் குற்றமாக பதிவு செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்காரணமாக தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய, அவ்வாறான குற்றவாளியாக அடையாளம் காணப்படுவோருக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

(UPDATE) அஸ்வெசும திட்டத்தால், சமூர்த்திக்கு பாதிப்பு?

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் நிதியமைச்சர் ஏன் மௌனம்?

முஸ்லிம் காங்கிரசின் மனு திங்கள் விசாரணைக்கு!