உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 45 பேர் கைது

(UTV | கொழும்பு) – முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணி நேரப் பகுதியில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 31 முதல் நேற்று வரையான காலப் பகுதியில் மேற்கண்ட குற்றச்சாட்டுக்காக 1,172 கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவ்வாறான குற்றச்சாட்டுகளில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை தொடர்ந்தும் ரோந்து பணிகளை முன்னெடுக்கும் என்றும் அவர் கூறினார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்கு கடன் வசதி

இன்று முதல் 3 மணி நேரம் மின்வெட்டு

பம்பலப்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து