கிசு கிசு

குழம்பிய குட்டையில் தடுமாறும் மைத்திரி

(UTV | கொழும்பு) – 2019 உயிர்த்த ஞாயிறு ஏப்ரல் 21 குண்டுவெடிப்பு மற்றும் தேசிய தௌஹீத் ஜமாஅத் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் ஆகியோருக்குப் பின்னால் ஒரு சக்திவாய்ந்த வெளிநாடு அல்லது வேறு ஏதேனும் ஒரு சக்தி இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளின் உளவுத்துறை அதிகாரிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

எனினும், அந்த அதிகாரிகள் எவராலும் சஹ்ரானை ஆதரித்தவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது இங்கு மிகவும் சிக்கலானது என்றும் அவர் கூறியுள்ளார்.

“சஹ்ரான் இந்த அமைப்பின் தலைவர் என்று நான் நம்பவில்லை, ஏனெனில் ஒரு தலைவர் ஒருபோதும் தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருக்க மாட்டார்,” என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று(25) முன்னிலையான அவர் இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.

தொடர்ந்தும் அவரது சாட்சியத்தில்;

நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதத்தின் கட்டுப்பாடற்ற எழுச்சிக்கு காரணம் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடமிருந்து தீவிரவாதிகள் பெற்ற ஆதரவே என்று அவர் தெரிவித்துள்ளார்.

“உங்கள் ஆட்சிக் காலத்தில், உளவுத்துறை, ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையின் தீவிர ஈடுபாடு இருந்தபோதிலும், குண்டுவெடிப்பு குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அது எப்படி நடந்தது?” ஒரு விசாரணையாளர் ஒருவர் வினவினார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

“..இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டதால், அதிகாரிகள் தங்கள் பணியை சரியாக செய்யவில்லை. அனைத்து துறைகளின் தலைவர்களும் தங்கள் பொருள் பகுதியைப் பற்றி விரிவான புரிதலுடன் செயல்பட வேண்டும்.

இது ஒவ்வொரு துறையினதும் பொறுப்பு. குண்டுவெடிப்புக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) தலைவர் இது ஐ.எஸ் அமைப்பின் தாக்குதல் என்று கூறினார்.

இந்த முழு சம்பவமும் ஒரு சதி என்று தோன்றுகிறது, ஏனென்றால் சஹ்ரான் ஹாஷிம் ஏதோ வெளிநாட்டுக் கையால் கையாளப்பட்டதாகத் தெரிகிறது.. ” என மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொருளாதாரத்தில் நசுங்கும் இலங்கை

கோட்டாவுக்கு இடம்விட்டு சீதா வெளியேறுகிறாள்

‘Miss Tourism World 2022’ இறுதிப் போட்டிகள் இலங்கையில்