விளையாட்டு

LPL மலேசியாவிற்கு மாற்றப்படும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – ஐபிஎல் கிரிக்கெட் போட்டி போலவே கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் தொடர் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற்று வருகின்றது.

இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் நவம்பர் 21ஆம் திகதி முதல் தொடங்க இருப்பதாகவும் இது குறித்து அட்டவணையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் ஐபிஎல் போட்டியில் விளையாடிய ஒரு சில வீரர்கள் லங்கா பிரீமியர் லீக்கில் விளையாடும் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில வீரர்கள் லங்கா பிரீமியர் லீக்கில் இருந்து விலகுவதாகவும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து லங்கா பிரிமியர் லீக் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இலங்கையில் இந்த தொடரை நடத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதால் இந்த போட்டியை ஐக்கிய அரபு எமிரேட் அல்லது மலேசியாவுக்கு மாற்றம் செய்ய லங்கா பிரிமியர் லீக் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சூரியவௌ மைதானம் புனரமைப்பு

ஒலிம்பிக் தீபம் புகுஷிமாவில் ஏற்றப்பட்டது

டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் ஐந்து அணிக்குள் இலங்கை