உள்நாடு

இது கொரோனாவின் மிகப்பெரிய இரண்டாம் அலை

(UTV | கொழும்பு) – பேலியகொட மீன் சந்தையில் தோன்றிய கொரோனா தொற்று, மினுவாங்கொட பிராண்டிக்ஸ் தொற்றில் இருந்து வெளிவந்த மிகப்பெரிய இரண்டாம் நிலை தொற்று என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பேலியகொட மீன் சந்தை தொற்று நாடு முழுவதும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸின் தற்போதைய பரவல் குறித்து அறிய பலர் அக்கறையுடன் உள்ளனர். சமூகத்தில் வைரஸ் பரவியதன் விளைவாக தற்போதைய நிலைமை உருவாகியுள்ளது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

உலக சுகாதார அமைப்பின் வரையறைகளின்படி, நாட்டில் பெரிய கொத்துகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.

வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நடைமுறையை மாற்றுவது முக்கியம். எனவே, பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன் சுகாதார அமைச்சு வழங்கிய சுகாதார பரிந்துரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதையும் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர கேட்டுக்கொண்டார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெலி ஓயாவில் நீராடச் சென் காணாமல்போன இருவரின் சடலங்கள் மீட்பு

கொரோனா வைரஸ் தொடர்பான விசேட கூட்டம்

பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று