உலகம்

இராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 15 பேர் உயிரிழப்பு

(UTV | ஆப்கானிஸ்தான்) – ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் இராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள நாவா மாவட்டத்தில் விமானப்படை வீரர்கள் நேற்றிரவு ஹெலிகாப்டர்களில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சவுதியில் திறக்கப்பட்ட மதுபானக்கடை!

தாய்வான் ஹெலி விபத்தில் உயரதிகாரிகள் 2 பேர் பலி

கொரோனா வைரஸ் – அமெரிக்க எச்சரிக்கை