விளையாட்டு

நடால் 20வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை சுவீகரித்தார்

(UTV | கொழும்பு) – கடந்த சில வாரங்களாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் பெற்றார். ஸ்பெயினை சேர்ந்த ரஃபேல் நடால் தனது 20வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ரோஜர் பெடரரின் சாதனையை நடால் சமன் செய்துள்ளார் நடால். நேற்று நடைபெற்ற இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் ரேங்கிங்கில் முதல் இடத்தில் உள்ள ஜோகோவிச்சும், இரண்டாம் இடத்தில் உள்ள நடாலும் மோதினர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய நடால் 6 – 0, 6 – 2, 7 – 5 என்ற நேர்செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.

Related posts

மஹேல ஜயவர்தனவிடம் இன்று விசாரணை நடத்தப்படாது

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு பந்துவீச விதிக்கப்பட்ட த​டை நீக்கம்

136 ஓட்டங்களால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி