உள்நாடு

உடன் அமுலுக்கு வரும் வகையிலான ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமை காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் யாகொடவில் இருந்து வந்துரவ வரையிலான எந்தவொரு புகையிரத நிலையங்களிலும் புகையிரதங்கள் நிறுத்தப்பட மாட்டாது என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், வெயங்கொட மற்றும் கம்பஹா ஆகிய புகையிரத நிலையங்களிலும் புகையிரதங்கள் நிறுத்தப்படமாட்டாது என குறித்த திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பு மீள் அறிவித்தல் விடுக்கும் வரையில் செயற்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மட்டக்களப்பில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு

இறக்குமதியாகிய இந்திய என்ஜின்களில் கோளாறு