உள்நாடு

இதுவரையில் 2,907 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 18 கொவிட் – 19 (கொரோனா) வைரஸ் நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று (04) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,907 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 192 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 3,111 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தற்போதைய ஜனாதிபதி மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் – சஜித்

editor

“வீட்டுக்கு வீடு செல்ல தயாராகும் நாமல்”

ராஜிதவுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல்