உள்நாடுசூடான செய்திகள் 1

இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று

(UTV|கொழும்பு) – இந்த வருடத்தின் இறுதி காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம்(28) இரண்டாவது நாளாகவும் விவாதம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை நேற்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கமைய, செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ஆம் திகதிவரையான 4 மாத செலவீனங்களுக்காக ஆயிரத்து 900 பில்லியன் பெறுமதியான இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது 1300 பில்லியன் ரூபாவுக்கு அதிகரிக்காத செலவீனங்களுக்காக அனுமதி கோரி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த இடைக்கால கணக்கறிக்கை தொடர்பில் விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.

Related posts

மீண்டும் செயலிழக்கும் சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம்

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்

பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம்… அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பில் ஆளுநர் உறுதி!