உள்நாடு

கொவிட் 19 – 3,000 ஐ நெருங்குகிறது

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் இருந்து வந்த மேலும் 6 இலங்கையர்களுக்கு கொவிட் 19 (கொரோனா) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த இருவருக்கும், கென்யாவில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் துபாயில் இருந்து வந்த ஒருவருக்கும் மலேசியாவில் இருந்து வந்த இருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,953 ஆக அதிகரித்துள்ள நிலையில், 136 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செயலமர்வு இன்று

அமைச்சர் குமார ஜயகொடிக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையே சந்திப்பு

editor

IGP தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான மனுக்கள் விசாரணை!

editor