உள்நாடு

மின் விநியோகம் நாளை முதல் வழமைக்கு

(UTV|கொழும்பு)- நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்காலிக மின் வெட்டு நாளையுடன்(22) நிறைவுக்கு வருவதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கெரவலப்பிட்டி மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு மின் வெட்டு மேற்கொள்ளப்பட்டது.

திருத்தியமைக்கப்பட்ட நுரைச்சோலை மின்நிலையம் பிரதான மின்சாரக் கட்டமைப்புடன் இன்று இணைக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், நாளை  முதல் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

திருத்தப்பட்ட VAT மசோதா மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பு

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு