உள்நாடு

குருநாகல் நகரசபை தலைவர் உட்பட 5 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

(UTV|குருநாகல் ) – குருநாகல் மாநகர மேயர், நகர ஆணையாளர் மற்றும் மேலும் மூவரை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நடைமுறைப்படுத்தாத காரணத்தால் தொடர்ந்து பிடியாணையை நீடிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட குழுவினருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குருநாகல் புவனேகபாகு மன்னர் கட்டடம் தகர்க்கப்பட்டமை சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரவிக்கப்பட்டு குறித்த நபர்களை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய வேலைத் திட்டத்துடன் களமிறங்கும் மைத்திரி கட்சி

ரயில் கட்டணம் அதிகரிப்பு

இராதாகிருஷ்ணன் தலைமையில் ஆசிரியர் சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது!