உலகம்

மியன்மார் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 தொழிலாளர்கள் பலி

(UTV|மியன்மார் )- மியன்மாரில் பச்சை மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 தொழிலாளர்கள் உயிரிலந்துலதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்கு பெய்த கடும் மழை காரணமாக நிலப்பகுதி ஈரமாக இருந்ததால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த அனர்த்தத்தில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 50 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Related posts

நாளை முதல் இலங்கையர்களுக்கு சிங்கப்பூரும் தடை

ரணில்- எலான் மஸ்க் சந்திப்பு!

இந்திய – சீன எல்லை மோதல் – இந்திய இராணுவத்தினர் 20 பேர் பலி