உள்நாடுசூடான செய்திகள் 1

அரசியலமைப்பு பேரவை நாளை கூடவுள்ளது

(UTV|கொழும்பு)- முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை நாளை(24) கூடவுள்ளது.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நாளை(24) மாலை 06 மணிக்கு அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் சான் விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

இதன்போது இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையில் காணப்படும் உறுப்பினர்களுக்கான வெற்றிடத்திற்கு ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சுகாதார ஆலோசனைகளை நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை

சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளருக்கு பிணை [VIDEO]

முல்லைத்தீவில் ஆயுதங்கள், தங்கம் தேடிய அகழ்வுப் பணி இரண்டாவது நாளாக முன்னெடுப்பு!