புகைப்படங்கள்

விமான நிலைய வளாகத்திற்குள் பீ.சி.ஆர் பரிசோதனைகள்

(UTV|கொழும்பு)- கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத்தந்த பயணிகளை விமான நிலைய வளாகத்திற்குளேயே வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரனதுங்கவுடன் சுகாதார அமைச்சர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான விசேட கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்ததை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, அதற்காக தேவைப்படும் உபகரணங்களை உடனடியாக வழங்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

   

       

Related posts

உலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல்

பரவும் காட்டுத்தீயினால் விக்டோரியா கடற்கரையில் மக்கள் தஞ்சம்

බංග්ලාදේශ නිල සංචාරයේදී අගමැතිට උණුසුම් පිළිගැනීමක්