உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – இலங்கையில் 10 ஆவது மரணம் பதிவானது

(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கையில் கொரொனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

குவைட்டில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இதுவரை நாட்டில் 1148 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளத்தை 25,000 ரூபாவால் அதிகரிக்க யோசனை

வரவு செலவுத் திட்டம் 2023 : சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் கட்சியின் தீர்மானம் இன்று