உள்நாடுசூடான செய்திகள் 1

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

(UTV|கொழும்பு)- இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 08 பேரில், 07 பேர் கடற்படையினர் எனவும், மேலும் ஒருவர் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவரெனவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1068 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 439 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 620 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஜூன் மாதம் விசாரணைக்கு

வவுனியா பொலிசாரால் மன்னாரைச் சேர்ந்த ஒருவர் கைது

எரிவாயு விலையில் மாற்றம் இல்லையாம்.