உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை

(UTV|கொழும்பு)- பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

குறித்த மனுக்களை விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்வதற்கு அதில் சட்டரீதியான காரணங்கள் குறிப்பிடப்பட்டிருந்தனவா என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வந்த நிலையில், இன்றும் ஆராய்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் குறித்த மனுக்களில் எவ்வித சட்டரீதியான தர்க்கமும் இல்லை என தெரிவித்துள்ள சட்ட மா அதிபர் அந்த மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

Related posts

கொரோனாவிலிருந்து 3230 குணமடைந்தனர்

ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பாலித தெவரப்பெருமவை கைது செய்ய கோரிக்கை

பேருந்து கட்டண சீர்திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல் இன்று(05)