உள்நாடு

இராணுவ அதிகாரிகள் 177 பேருக்கு பதவி உயர்வு

(UTV | கொழும்பு) – தேசிய இராணுவ வீரர்கள் தினத்தை முன்னிட்டு 177 இராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி உயர்வு வழங்கவுள்ளார்.

இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கு அமைய இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

5 இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல்களாகவும், பிரிகேடியர்களாக 4 பேரும் லெப்டினன் கேர்னலாக 39 பேரும் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும், மேஜர்களாக 69 இராணுவ அதிகாரிகள் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

Related posts

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் கைகொடுக்கும் இந்தியா

இத்தாலியில் இருந்து வந்த இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி

இதுவரையில் கவனம் செலுத்தாத 14 துறைகளுக்கு வரி அறவீடு.