உள்நாடு

கடற்படை உறுப்பினர்களின் விடுமுறை மறுஅறிவித்தல் வரை இரத்து

(UTV|கொழும்பு)- அனைத்து கடற்படை உறுப்பினர்களினதும் விடுமுறை மறுஅறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடற்படை வீரர்கள் தமது முகாமிலிருந்து வௌியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள படையினருடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பிலான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அளுத்கம- மொரகல கடலில் நீராடச் சென்ற மாணவர்களில் ஒருவர் மாயம்

பேரிச்சம் பழத்திற்கான வரி குறைப்பு!

சிறைச்சாலைகளில் செனிடைசர் திரவங்களுக்கு தடை