உலகம்

கனடா – அமெரிக்கா எல்லை மேலும் 30 நாட்களுக்கு பூட்டு

(UTV|கொழும்பு)- கனடா – அமெரிக்கா எல்லை மேலும் 30 நாட்களுக்கு மூடப்படும் என்று கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஏற்கனவே, அமுலில் உள்ள இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதி மூடும் நடவடிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வரும் நிலையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இருநாடுகளுக்கு இடையிலான அத்தியாவசிய பொருட்களுக்கான போக்குவரத்து வழக்கம்போல தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எகிப்து எல்லையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இராணுவம்!

இன்ஸ்டாகிராமை ரஷ்யா முடக்கியது

டெல்டாவுக்கு சவாலாகும் ‘லாம்ப்டா’