உலகம்

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்வு

(UTV|கொழும்பு)- தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றதுடன், 700 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 29 ஆக் உயர்ந்துள்ளது.

Related posts

27 இந்திய மீனவர்களை விடுதலை செய்யகே கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

இந்திய பயணிகளுக்கு ஞாயிறு முதல் தற்காலிக தடை

இளவரசர் பிலிப்பிற்கு சனியன்று இறுதி அஞ்சலி