உள்நாடு

பதிவு செய்தலுக்காக 33 புதிய கட்சிகள் விண்ணப்பம்

(UTV|கொழும்பு) – இதுவரை 33 புதிய கட்சிகள் பதிவு செய்தலுக்காக விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்தல் தொடர்பில் மேற்பார்வை செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17ஆம் திகதி வரை புதிய அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் பதிவிற்காக விண்ணப்பிக்கும் புதிய அரசியல் கட்சிகளின் தகுதிகளை பரிசீலனை செய்து அதன்பின்னர், பதிவு செய்யப்படவுள்ளன.

இந்தக் காலத்திற்குள் தேர்தலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் எனவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 826 பேர் குணமடைந்தனர்

ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்

editor

அவசரத் தேர்தல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாகாது