உள்நாடு

ஜமுனா கப்பல் இலங்கையில்

(UTV|கொழும்பு) – இந்திய கடற்படைக்கு சொந்தமான ஜமுனா என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கொழும்பில் இருந்து காலி வரையிலான கடல் பிரதேசத்தில் நீர் தொடர்பான விஞ்ஞான ஆய்வை மேற்கொள்வதற்காக வந்துள்ள இந்த கப்பலில் கட்டளைத்தளபதி ஹப்டன் HA Hardas உள்ளிட்ட அதிகாரிகள் பலர் வந்துள்ளனர்.

இவர்கள் காக்கைதீவில் உள்ள நீர் விஞ்ஞான ஆய்வு தொடர்பான அலுவலகத்தில் கடற்படையினரால் வரவேற்க்கப்பட்டனர்.

86 மீற்றர் நீளத்தையும் 1920 தொன் வலுவையும் கொண்ட ஜமுனா கப்பல் 2020 ஏப்ரல் 3 ஆம் திகதி வரையில் இலங்கையில் இருந்து நீர் குறித்த விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

Related posts

மறு அறிவித்தல் வரையில் மின் துண்டிப்பு இடம்பெறாது

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 754 ஆக அதிகரிப்பு

நாட்டை முடக்குவதற்கு இதுவரையில் தீர்மானம் இல்லை