உலகம்சூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|சீனா) – சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிலந்தவ்ரகுளின் எண்ணிக்கை 259 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை தினமும் உயர்ந்துகொண்டே செல்கிறது. அதேபோல வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளவர்களின் எண்ணிக்கையும் 11 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை உட்பட 20 நாடுகளுக்கு இந்த வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. சீனாவில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பியவர்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனமும் சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கொரோனா வைரஸ் தாக்குதலை முறியடிப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும்.

Related posts

நாலக சில்வா எதிர்வரும் ஜனவரி 02 வரையில் விளக்கமறியலில்

UNHRC 30/1 தீர்மானத்திலிருந்து விலக அமைச்சரவை அனுமதி

நேற்றையதினம் குறைந்தபட்ச உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அமர்வு இன்று