உள்நாடு

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு கால வரையறையின்றி பூட்டு

(UTV|கொழும்பு) – கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து, முதலாம் வருட, இரண்டாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள், கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில், இரண்டு 1ஆம் ஆண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்தப் பல்கலைக்கழகக் கலைப்பீட 1ஆம் ஆண்டு மாணவர்கள், “வன்முறையற்ற மாணவர் அமைப்பு” என, பகிடிவதையை இல்லாது ஒழிக்கும் ஒர் அமைப்பை உருவாக்கிச் செயற்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று(20) வன்முறையற்ற மாணவர் அமைப்பை ஆரம்பித்த முதலாம் ஆண்டு மாணவர் இருவர் மீது, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் சிலமணிநேரம் பதற்றமான சூழல் நிலவியிருந்தமையும் குறிபிடத்தக்கது.

Related posts

20ம் திருத்தச் சட்டமூலம் குறித்த வர்த்தமானி

நேற்று மாத்திரம் 3,518 PCR பரிசோதனை

மின் கட்டணங்களை குறைக்க முடியும் – பிரதமர்