உலகம்

ஜிசாட்-30 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ

(UTV| இந்தியா) – இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைக் கோளான ஜிசாட்-30 இன்று (17) அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

பிரான்சின் பிரெஞ்சு கயானாவின் கவ்ரவ் ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 2.35 மணிக்கு செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஐரோப்பிய முகமையின் ஏரியேன்-5 ரொக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது.

ஒளிபரப்பு மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்-4ஏ செயற்கைக் கோளுக்கு பதிலாக இந்த ஜிசாட்-30 செயற்கைக் கோள் ஏவப்பட்டுள்ளது.

3 ஆயிரத்து 357 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக் கோள் DTH, டிஜிட்டல் சேவை உள்ளிட்டவைகளுக்கு உதவும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது

15 ஆண்டுகள் இயங்கும் வகையில் இந்த செயற்கைக் கோள் வடிவமைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்ய ஆயுதக்கிடங்கில் தீ : 14 கிராம மக்கள் வெளியேற்றம்

நாளை முதல் இலங்கையர்களுக்கு சிங்கப்பூரும் தடை

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியது