உலகம்

எரிமலை சீற்றத்தால் ஏற்பட்ட கரும்புகை – விமானங்களுக்கு எச்சரிக்கை

(UTV|அமெரிக்கா)- அலாஸ்காவில் உள்ள எரிமலை சீற்றத்தால் ஏற்பட்ட கரும்புகையால், அந்த வழியாக விமானங்கள் செல்வதை தவிர்க்குமாறு விமான போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எரிமலை வெடித்துச் சிதறியதால் கிளம்பிய கரும் புகை வானில் சுமார் 8 கிலோ மீட்டருக்கு பரவிய நிலையில், வான்வெளியில் புகை பரவியதால் அந்த வழியாக செல்லும் விமானங்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின.

இந்நிலையில், அலாஸ்கா எரிமலையை சுற்றி 8 கி.மீ.க்கு சாம்பலும் புகையும் சூழ்ந்துள்ளது. இதனால் விமானங்கள் அந்த வான்வெளியை பயன்படுத்த வேண்டாம் என விமான போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

எண்ணெய் கப்பலின் பணியாளர்களை தேடும் நடவடிக்கை தொடர்கிறது

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம் [VIDEO]

நெதர்லாந்தில் கடுமையான ஊரடங்கு அமுல்