உள்நாடு

முன்னாள் அமைச்சர்களுக்கு 2வது தடவையாகவும் நினைவூட்டுகைக் கடிதம்

(UTV|COLOMBO) – உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை கையளிக்காத முன்னாள் அமைச்சர்களிடம் அபராதத்தை அறவிடுவதற்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு தீர்மானித்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் சிலர் இதுவரை தங்களின் உத்தியோகபூர்வ இல்லங்களைக் கையளித்துள்ளதாகவும், பெரும்பாலான முன்னாள் அமைச்சர்கள் இதுவரை தங்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்கவில்லை எனவும் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

வீடுகளைக் கையளிக்குமாறு கோரி இரண்டாவது தடவையாகவும் நினைவூட்டுகைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அங்கவீனர்களுக்காக புதிய சட்டம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; 12 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

நாங்கள் சளைத்தவர்கள் அல்ல கொழும்பில் தனித்துப் போட்டி – டக்ளஸ் தேவானந்தா

editor