சூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் பிற்போடப்பட்டது

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்த தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் குறித்து தீர்மானம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக இதுவரை எந்தவித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என கட்சியின் ஊடக பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ரோஹித பொகொல்லாகமவின் மனைவி மற்றும் மகளை கைது செய்ய உத்தரவு

சீமெந்து விலை அதிகரிப்பு

கே.டி லால்காந்தவுக்கு விளக்கமறியல்…