சூடான செய்திகள் 1

இன்று முதல் மூன்று தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத்திட்டம்

(UTV|COLOMBO) இன்று(12) முதல் டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரித்துள்ளதால் நாட்டின் 5 மாவட்டங்களில் மூன்று தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் காலி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

டெங்கு குடம்பிகள் பரவும் வகையிலான சுற்றுச்சூழலை வைத்திருப்பவர்கள் சுற்றுச்சூழலைத் துப்புரவுசெய்து அது தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறும் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

 

 

 

 

Related posts

இலங்கையில் சமூகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் கவலையளிக்கிறது

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான முயற்சி!

கல்முனை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதுகாப்பு தரப்பினருக்கு பாதிப்பில்லை