கிசு கிசுசூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை-பிரதமர்

(UTV|COLOMBO) பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிபிசி செய்திச் சேவையிடம் நேற்று நேர்காணலில் கலந்துக்கொண்டிருந்தார்.

அதன்போது, குறித்த தாக்குதல் தொடர்பில் அறிந்திருந்தீர்களா என பிபிசி செய்தியாளர் பிரதமரிடம் வினவியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் , குறித்த தாக்குதல் தொடர்பில் அறிந்திருக்கவில்லை என கூறியிருந்தார்.

புலனாய்வுப்பிரிவு தகவல்கள் அறிக்கையில் உள்ள நிலையில் அது தொடர்பில் அறிந்திராமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

புலனாய்வுப் பிரிவு அதனை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியிருந்ததாகவும் , அங்கிருந்து குறித்த தகவல்கள் காவற்துறைக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் பிரதமர் அதற்கு பதில் வழங்கியிருந்தார்.

இதன்போது , வௌிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கை பாதுகாப்பானதா என செய்தியாளர் வினவியிருந்த நிலையில் , அதற்கு பதில் வழங்கிய பிரதமர் , அரசாங்கம் ஏதேனும் ஒரு பதிலை வழங்கியுள்ளதாகவும் , இந்நாட்டிற்கு சுற்றுலாப்பயணத்தை மேற்கொள்வது தொடர்பில் அவர்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

அரச நிறைவேற்று அதிகாரிகள் பணிபுறக்கணிப்பில்…

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் 10 மனுக்கள்

டென்மார்க் செல்வந்தரின் பிள்ளைகள் மூவர் உயிரிழப்பு