சூடான செய்திகள் 1

விசேட சுற்றிவளைப்பில் 245 சாரதிகள் கைது…

(UTV|COLOMBO) இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுள் மதுபோதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றிவளைப்புகளில் 10 ஆயிரத்து 170 போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில்  மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவதற்காக விசேட சுற்றிவளைப்புகள் நேற்று முதல் நாடாளவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நடவடிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

 

 

 

 

Related posts

ஊரடங்கு சட்டம் நீக்கம்

இலங்கையின் நகரங்களது நிலவரம்

மரக்கறி இறக்குமதி தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை