சூடான செய்திகள் 1

கொழும்பின் சில பகுதிகளில் நாளை(02) நீர்வெட்டு

(UTV|COLOMBO) குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் கழிவுநீர் செயற்றிட்டம் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை(02) இரவு 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

கொழும்பு – 13,14,15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, இந்தக் காலப்பகுதியில் கொழும்பு – கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,989 ஆக பதிவு

இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது

வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹாவிலும் மீண்டும் ஊரடங்கு சட்டம்