சூடான செய்திகள் 1

கொழும்பின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் மூவர் ஹெரோயினுடன் கைது

(UTV|COLOMBO)-கல்கிஸ்ஸ – சட்டிகல மாவத்தை பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் 205 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரத்மலானையை சேர்ந்த 41 வயதுடைய குறித்த சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை , பொரளை – வெலிகட சிறைச்சாலைக்கு அருகில் 24 கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 14 ஐ சேர்ந்த 50 வயதுடைய இவர் இன்றைய தினம் மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அதேபோல் , மட்டக்குளி – கதிரான தோட்டம் பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 55 வயதுடைய சந்தேகநபரொருவர் 10 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு 05 வருட வரி விலக்கு – நிதி அமைச்சர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிந்திருக்கவில்லை

உயர்தர பரீட்சை நேர அட்டவணை பிரச்சனைகள் இருக்குமாயின் விபரங்களை அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள்