சூடான செய்திகள் 1

மாகாண சபைத் தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும்- பெஃப்ரல் அமைப்பு

(UTV|COLOMBO)-மாகாண சபைத் தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் விரைவில் பாராளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்தவிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

6 மாகாண சபைகளின் அதிகாரக் காலம் நிறைவடைந்துள்ளது.

எனினும் அவற்றுக்கான தேர்தல், மாகாண எல்லை மறுசீரமைப்பு அறிக்கை குறித்த மீளாய்வுப் பணிகள் தாமதித்துள்ளமையால், நடத்தப்படாதுள்ளது.

இந்தநிலையில் பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள மீளாய்வுக் குழு தமது அறிக்கையை 2 மாதங்களுக்குள் கையளிக்க வேண்டும் என்றும் பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 

 

 

 

Related posts

காலி கிரிக்கெட் மைதானம் அகற்றப்பட மாட்டாது-அமைச்சர் அகில விராஜ்

கட்சி வேறுபாடின்றி சகலரும் தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும்

ஶ்ரீ.சு.கட்சி – ஶ்ரீ.பொ.முன்னணி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கைச்சாத்து